கிருஷ்ணகிரி

சாலை விபத்து: இளம்பெண் பலி

DIN


 ஒசூர் அருகே முன்னாள் சென்ற லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளம்பெண் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், அனந்தபூரைச் சேர்ந்தவர் விருபாட்சியப்பா.  இவரது மகள் உமாதேவி (21). இவர் அக்கொண்டப்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சளகிரியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றபோது அக்கொண்டப்பள்ளி அருகே எதிரே ஒரு வாகனம் வந்தது. இதனால் அவர் இரு சக்கர வாகனத்தை இடதுபுறமாக நிறுத்த முயன்றபோது முன்னால் நின்ற லாரி மீது மோதினார்.
இதில் பலத்த காயம் அடைந்த உமாதேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார். கெலமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT