கிருஷ்ணகிரி

போக்குவரத்து விதிகளை மீறியஆட்டோக்கள் பறிமுதல்

பர்கூரில் போக்குவரத்து விதிகளை மீறிய 5 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

DIN


பர்கூரில் போக்குவரத்து விதிகளை மீறிய 5 ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் செயல்படும் துணி சந்தைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களின் நலன் கருதி, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், நாட்றாம்பாளையம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி, பசவண்ணகோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.
சாலை விதிமுறை மீறி இயக்கப்படும் இந்த ஆட்டோக்களால் அடிக்கடி நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அடிக்கடி திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய நிலையில், பர்கூர் அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையில் சாலை விதிமுறைகளை மீறிய 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT