கிருஷ்ணகிரி

தூய்மைக் காற்று வார விழிப்புணர்வு பேரணி

DIN

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேருராட்சி சார்பில் தூய்மைக் காற்று வார விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியர் மாதப்பன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் கு.கணேசன் தூய்மைக் காற்று வாரத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். ஆண்கள் பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் கல்லாவி சாலை, ரவுண்டானா, பழைய கடை வீதி, காவல் நிலையம், ஊத்தங்கரையின் முக்கியச் சாலைகள் வழியாகச் சென்றது. 
இதில், ஆசிரியர்கள் பசுமைப் படை க.முத்துக்குமார், தேசிய மாணவர் படை பி.பூமணி, சாரணர் இயக்கம் எ.ஜெயசீலன், மணிவாசகம், பிரபு, நூலகர் மகாலிங்கம், பேருராட்சி சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் மாலிக், பணியாளர்கள் பழனி, இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT