கிருஷ்ணகிரி

கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

DIN

ஊத்தங்கரையை அடுத்த சின்ன ஆனந்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை  கேலி செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னகாமாட்சிபட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பிரசாந்த் (23), சக்திதாஸ் (23),  ஸ்ரீதர் (19)  ஆகிய மூன்று பேரும் செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவியை கேலி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார். தந்தை கொடுத்த புகாரின்பேரில் கல்லாவி போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூன்றுபேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT