கிருஷ்ணகிரி

தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக நிதியுதவி

DIN

அஞ்செட்டியில் தீவிபத்து நிகழ்ந்த வீட்டின் உரிமையாளருக்கு திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
 அஞ்செட்டி ஒன்றியம் குந்துகோட்டை ஊராட்சி குருபரப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் தச்சுத் தொழிலாளி மாதேவப்பா. இவரது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மர்ம நபர்கள் வீட்டுக்கு தீவைத்து விட்டு தப்பியோடினர். இந்த விபத்தில் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களும் எரிந்து சாம்பலாகின.
தகவல் அறிந்த திமுக மாவட்டச் செயலாளரும், தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய். பிரகாஷ்
அவரது வீட்டைப் பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 20 ஆயிரம் திமுக சார்பில்  நிவாரண நிதியாக
வழங்கப்பட்டது.
உடன் தளி ஒன்றிய செயலாளர்கள் திவாகர், சீனிவாச ரெட்டி, அவைத்தலைவர் நாகராஜ், துணைச் செயலாளர் முனிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT