கிருஷ்ணகிரி

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை: அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்

DIN

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு  தமிழக அரசு வழங்கும் விருதுகளைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து,  மாவட்ட நிர்வாகம் சார்பில், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில  அளவில் சிறப்பாக சேவையாற்றிய நிறுவனங்கள்,  சிறந்த மருத்துவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த நிறுவனம்,  மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சமூக பணியாளர்,  அதிக அளவில் கடன் வழங்கிய கூட்டுறவு வங்கி போன்ற சேவை செய்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே,  இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 23-இல் செயல்படும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று  விண்ணப்பத்தை நிறைவு செய்து, ஜூலை 5 - ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT