கிருஷ்ணகிரி

யானை தாக்கியதில் பெண் சாவு

யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தார். 

DIN

யானை தாக்கியதில் பெண் உயிரிழந்தார். 
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள குடிசையூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மா. இவர் அரசுப் பள்ளியில் சமையல் பணி செய்து வந்தார். 
இவர் தெக்களி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற திருவிழாவை காண சென்ற போது, அந்த வழியாக வந்த யானை ராஜம்மாவை விரட்டியது. யானையைக் கண்ட ராஜம்மா ஓட்டம் பிடித்தார். ஆனால், விரட்டி வந்த யானை ராஜம்மாவை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வனத் துறையினர் ராஜம்மாவின் உடலைக் கைப்பற்றினர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT