கிருஷ்ணகிரி

5-ஆம் நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோதண்ட ராமர் சிலை

DIN

ஒசூர் அருகே பேரண்டப்பள்ளி கிராமத்தில் தென் பெண்ணை ஆற்றில் நீர் அதிகம் செல்வதால் மண் சாலை வழியாக கோதண்ட ராமர் சிலையைக் கொண்டு செல்ல முடியாமல்  5-ஆம் நாளாக சிலை அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையிலிருந்து புதன்கிழமை நிலவரப்படி 408 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றில் அதிகப்படியான நீர்வரத்து இருக்கிறது. இதனால் ஒசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள மண் சாலையில் சிலையைக் கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது பேரண்டப்பள்ளி அருகே தென் பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகம் செல்வதால்  சிலை செல்வது காலதாமதமாகும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT