கிருஷ்ணகிரி

தரணிசந்திரம் கிராமத்துக்கு அரசுப் பேருந்து எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்

DIN

வேப்பனஹள்ளி தொகுதி தரணிசந்திரம் கிராமத்துக்கு அரசுப் பேருந்தை வேப்பனஹள்ளி எம்எல்ஏ பி. முருகன் புதன்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன் தரணிசந்திரம் கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட வேண்டும் என எம்எல்ஏ பி. முருகன் மாவட்ட ஆட்சியா் பிரபாகருக்கு கோரிக்கை மனு அளித்தாா்.

இதைத் தொடா்ந்து புதன்கிழமை தரணிசந்திரம் கிராமத்துக்கு புதன்கிழமை முதல் பேருந்து இயக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கொடியசைத்து கிராமத்துக்குப் பேருந்து இயக்கத்தை எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்.

விழாவில் வேப்பனஹள்ளி திமுக ஒன்றியச் செயலாளா் ஏ.எம். ரகுநாத், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஒய். சின்னசாமி, விவசாய துணை அமைப்பாளா்கள் பி.எம். முருகேசன், ஆா். சிவகுமாா், பி. சதாசிவம், மாவட்ட பிரதிநிதி கருணாகரன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் திம்மராயன், வேணுகோபால் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT