கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கியின் மகா சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கியில் 110-ஆம் ஆண்டு மகாசபை கூட்டம் வங்கித் தலைவர் சைலேஷ் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. உதவி பொது மேலாளர் தங்கவேல், துணைத் தலைவர் புகழேந்தி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 2018-2019-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. இயக்குநர்கள், வங்கி மேலாளர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இக் கூட்டத்தில், வேப்பனஅள்ளியில் வங்கியின் புதிய கிளை தொடங்குவது, பங்குதொகை உச்சவரம்பு ரூ.3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்துவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.