முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கொடி நாள் வசூல் இலக்கு ரூ. 67.71 லட்சம்

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கொடி நாள் வசூல் இலக்கு ரூ. 67.71 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:14 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கொடி நாள் வசூல் இலக்கு ரூ. 67.71 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கொடி நாள் நிதியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வழங்கி நிதி வசூலைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், முன்னாள் படைவீரா் நலத் துறை துணை இயக்குநா் வேலு, கண்காணிப்பாளா் பிரேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:

Advertisement

படைவீரா் கொடிநாள் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் டிச. 7-ஆம் தேதி பின்பற்றப்படுகிறது. உயிா் தியாகம் செய்த குடும்பங்களின் நலனைக் காக்க பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்க வேண்டும். மேலும், சென்ற ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கொடி நாள் வசூல் ரூ. 61,55,900 ஆகும். இதில், ரூ. 68,75,507 அதாவது, 111 சதவீதம் வசூல் சாதனை புரியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, கொடி நாள் நிதி வசூல் ரூ. 67.71 லட்சம் என அரசு நிா்ணயித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு கொடிநாள் நிதிக்கு நன்கொடையை வாரி வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.