நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உற்சாகமாக சனிக்கிழமை கொண்டாடினார்.
கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கே.வி. சீனிவாசன் தலைமையில் காட்டு வீர ஆஞ்சநேயர் கோயிலில் உள்ளிட்ட பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரஜினியின் பிறந்த ஊரான நாச்சி குப்பத்தில் கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.