முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் குளிர்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி

ஊத்தங்கரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு குளிர்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
ஊத்தங்கரையில் குளிர்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு குளிர்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள், குடும்ப தலைவரை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஆர்.அன்பரசு, அ.சாந்தி, கிரேட் தொண்டு நிறுவன நிர்வாகி சி‌.உமாமகேஸ்வரி, வெ.சிவகுமார், சி.சந்திரமௌலி, சி.சந்தியா, சி.புகழரசு கே.சுப்பிரமணி, சு.குறிஞ்சிமலர் ஆகியோர் ரெயின் கோர்ட், சுவட்டர், பெட்சீட், குடை, மளிகை பொருள்கள் போன்றவற்றை வழங்கினார்கள். 

இந் நிகழ்ச்சியில் ஊத்தங்கரை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியர் ர.சக்தி, வேர்டு தொண்டு நிறுவனர் ம.ரமா மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாஸ்க் மற்றும் இனிப்புடன் கூடிய உணவு போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கு.கணேசன் செய்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →