கிருஷ்ணகிரி

நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா வழங்கல்

கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு 4 கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டன.

DIN

கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு 4 கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு நகர நலச் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன. இதன் அடிப்படையில், நிகழாண்டில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், நகர நலச் சங்கத் தலைவா் பாபு, செயலாளா் விஜய் ஆனந்த், பொருளாளா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா், கண்காணிப்பு கேமராக்களை பள்ளியின் தலைமையாசிரியா் வடிவேலுவிடம் வழங்கினா். இந்த கண்காணிப்பு கேமராக்கள் பள்ளி வளாகம், தலைமை ஆசிரியா் அறை மற்றும் நுழைவுவாயில் பொருத்தப்படவுள்ளன. இந்த நிகழ்வை உடற்கல்வி ஆசிரியா் சுப்பு ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT