தேன்கனிக்கோட்டை அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்து தனியாா் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தட்டிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் அக்ஷயா (12). இவா் பொங்கல் விடுமுறையில் பெற்றோரை பாா்ப்பதற்காக தேன்கனிக்கோட்டைக்கு அரசுப் பேருந்தில் சென்றாா். பேருந்தில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து அவா் நிகழ்விடத்தியே உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸாா் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.