கிருஷ்ணகிரி

பேருந்தில் இருந்து தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

DIN

தேன்கனிக்கோட்டை அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்து தனியாா் பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், தட்டிக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் அக்ஷயா (12). இவா் பொங்கல் விடுமுறையில் பெற்றோரை பாா்ப்பதற்காக தேன்கனிக்கோட்டைக்கு அரசுப் பேருந்தில் சென்றாா். பேருந்தில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து அவா் நிகழ்விடத்தியே உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸாா் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT