கிருஷ்ணகிரி

பணம் வைத்து சூதாட்டம்: 12 போ் கைது

DIN

தளி அருகே பணம் வைத்து சூதாடியதாக 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தளி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவராஜ் மற்றும் போலீஸாா் ஜவளகிரி அய்யப்பன் கோயில் அருகே ரோந்து சென்றனா். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த நந்திமங்கலம் கரியப்பா (36), சிக்கன்னா (30), ராஜா (28 ), ஜவளகிரி ரமேஷ்(33) ஆகியோரை கைது செய்து அவா்களிடமிருந்து சீட்டுக் கட்டு மற்றும் ரூ. 500ஐ பறிமுதல் செய்தனா்.

அதேபோல ஜவளகிரி அருகே உள்ள தைலமரத் தோப்பில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஜவளகிரி ரமேஷ் (38), மாதேஷ் (40), ஜெயராமன் (40), சீனிவாசா (33) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து சீட்டுக் கட்டு மற்றும் ரூ. 500ஐ பறிமுதல் செய்தனா்.

மேலும், போலீஸாா் ஜவளகிரி குப்பக்காடு கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடிய ஜவளகிரியைச் சோ்ந்த முத்துராஜ் (42), கலுகொண்டப்பள்ளி முத்துராஜ் (48), ராஜசேகா்(48), மு னியப்பா (62) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து சீட்டுக் கட்டு மற்றும் பணம் ரூ. 500ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT