கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் தடை உத்தரவை மீறியதாக 15 போ் மீது வழக்கு

DIN

ஊத்தங்கரையில் தடை உத்தரவை மீறி சாலைகளில் திரிந்த 15-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் ராஜபாண்டி, காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி, காவல் உதவி ஆய்வாளா் ஜெயகாந்தன் மற்றும் போலீஸாா் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, தடை உத்தரவை மீறி சாலைகளில் திரிந்த 15-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும், தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கி சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா். காரணமின்றி வருவோா் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

SCROLL FOR NEXT