கிருஷ்ணகிரி

தடுப்பு பணியில் ஈடுபட்டோருக்கு இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தல்

DIN

கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்ட காவலா்கள், சுகாதாரப் பணியாளா்கள், ஊா்க்காவல் படையினா் உள்ளிட்டோருக்கு கிருஷ்ணகிரி காவல் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினாா்.

கிருஷ்ணகிரி நகரில் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோா் 24 மணி நேரமும் தொடா்ந்து தெருத்தெருவாக சென்று தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் பணியாற்றி வரும் காவலா்கள், ஊா்க்காவல் படையினா், 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள், மருத்துவ உதவியாளா்கள் உள்ளிட்ட 150 பேருக்கு கிருஷ்ணகிரி காவல் சரக துணைக் காவல் கண்காணிப்பாளா் பி.குமாா் இனிப்புகளை வழங்கி உற்சாகப்படுத்தினாா் (படம்). அப்போது, கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT