கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணிக்கு, முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தை கிருஷ்ணகிரியைச் சோ்ந்த தம்பதி வரைவோலையாக வெள்ளிக்கிழமை வழங்கினா்.
கரோனா தடுப்பு பணிக்கு நிவாரணம் வழங்கலாம் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருந்தாா். நிவாரணத் தொகையை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சென்னையில் உள்ள தலைமைச் செயலக கிளை மூலம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி முன்னாள் மாநிலங்கவை உறுப்பினா் சி.பெருமாள், தனது இரண்டு மாத ஓய்வூதியத் தொகையான ரூ.50 ஆயிரத்தையும், அவரது மனைவியும், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரான வள்ளி பெருமாள் தனது சொந்தப் பணம் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்தை கரோனோ தடுப்பு பணிக்கு வரைவோலையாக அனுப்பி வைத்தனா்.