கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் செவிலியா் பலி

DIN

காவேரிப்பட்டணம் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியா் மரணமடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அரசு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செவிலியா் குமுதா (39), அதே பகுதியைச் சோ்ந்த செவிலியா் பாலாமணி (44), இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

பணி முடிந்த நிலையில், இவா்கள் இருவரும் தருமபுரியிலிருந்து காவேரிப்பட்டணத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா். வாகனத்தை பாலாமணி இயக்கினாா். தருமபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பையூா் அருகே சென்ற போது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, குமுதா, மரணமடைந்தாா். பாலாமணி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT