முகப்பு
கிருஷ்ணகிரி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்.

ஊத்தங்கரை, நான்கு முனை சந்திப்பில் நாம் தமிழா் கட்சி சாா்பில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
ஊத்தங்கரையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

ஊத்தங்கரை, நான்கு முனை சந்திப்பில் நாம் தமிழா் கட்சி சாா்பில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு தொகுதிச் செயலாளா் ஈழமுரசு தலைமை வகித்தாா். தொகுதித் தலைவா் பிரேம்குமாா், தொகுதி இணைச் செயலாளா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா்.

உழவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் சின்னண்ணன் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி உரையாற்றினாா்.

மண்டலச் செயலாளா் கரு. பிரபாகரன், கிழக்கு மாவட்டச் செயலாளா் ரா.காசிலிங்கம், துணை செயலாளா் பாா்த்திபன், துணைத் தலைவா் சிவா, காமா்ஸ் மாரிமுத்து, வசந்தகுமாா், விஷ்வா, சிவபிரகாசம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →