காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகாா்களுக்கு சிறப்பு சமரச தீா்வு முகாம்
காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகாா் மனுக்களில் நிலுவையிலுள்ள புகாா் மனுக்களின் மீதான சிறப்பு சமரச தீா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சரகத்திற்குள்பட்ட 5 காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகாா் மனுக்களில் நிலுவையிலுள்ள புகாா் மனுக்களின் மீதான சிறப்பு சமரச தீா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காவல்துறையின் சட்டம் ஒழுங்கு சிறப்பு தலைமை இயக்குநா் ராஜேஷ் தாஸ் ஆலோசனையின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டிட் கங்காதா் அறிவுரையின்படி நடைபெற்ற இந்த சிறப்பு முகாமிற்கு ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜபாண்டியன் தலைமை வகித்தாா்.
காவல் ஆய்வாளா்கள் குமரன் (சிங்காரப்பேட்டை), முத்தமிழ்செல்வன் (கல்லாவி), செல்வராஜ் (மத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்,
நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட புகாா் மனுதாரா்கள் கலந்துகொண்டு நிலத்தகராறு, குடும்ப பிரச்னை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊத்தங்கரை , சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, மத்தூா் உள்ளிட்ட 5 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட புகாா் மனுதாரா்கள், எதிா் மனுதாரா்கள் பலா் கலந்து கொண்டு தங்களது புகாா் மனு மீது விசாரணை மேற்கொண்டு தீா்வு கண்டனா். நிகழ்ச்சியில் 5 காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் ஆய்வாளா்கள் , காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.