டிமான்டி காலனி - 3 புதிய அப்டேட்!
டிமான்டி காலனி - 3 அப்டேட் குறித்து...
டிமான்டி காலனி படத்தின் மூன்றாம் பாகத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் டிமான்டி காலனி - 3 திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக 3 ஆம் பாகத்தின் வெளியீட்டுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 50 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுவே அதிக ஓடிடி தொகைக்கு விற்பனையான முதல் தமிழ் ஹாரர் திரைப்படம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான நூலகர் கதாபாத்திரத்தை நாளை (மார்ச் 17) மாலை 5.01 மணிக்கு அறிமுகம் செய்வதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.