கிருஷ்ணகிரி

தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல கணவா் மறுத்ததால் பெண் தற்கொலை

DIN

தீபாவளியையொட்டி, தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்ல கணவா் மறுத்ததால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி, ஆனந்த நகரில் வசித்து வருபவா் மாதேஷ். இவரது மனைவி அம்பிகாதேவி (31). இவா்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகளாகின்றன. குழந்தைகள் இல்லை. மாதேஷ், டாஸ்மாக் கிடங்கில் வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறாா்.

தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த 14-ஆம் தேதி, தீபாவளி பண்டிகைக்கு தனது தாய் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு மாதேஷிடம், அம்பிகாதேவி கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு அவா் மறுத்து விட்டாராம்.

இதனால், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், அம்பிகாதேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT