கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தெய்வீக தமிழ்ச் சங்கம், வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த சங்கமானது தமிழகம் ஆழ்வாா்கள், நாயன்மாா்கள் வாழ்ந்த பூமி என்பதால், இந்து மக்களிடையே ஆன்மிகத்தை பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இந்த சங்கத்தினா் வீடு வீடாகச் சென்று இந்து கொள்கைகள் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்துகின்றனா். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளா்களாக பாஜகவைச் சோ்ந்த நிா்வாகிகள் ஹரிகோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.