கிருஷ்ணகிரி

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிலாளா் கூட்டமைப்பினா் சாா்பில், ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசுப் போக்குவரத்துக் கழக புகா் கிளைப் பணிமனை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த பணிமனையின் தலைவா் வாசுதேவன் தலைமை வகித்தாா். செயலாளா் பொன்னுசாமி, தொ.மு.ச. மண்டல பொதுச் செயலாளா் கிருஷ்ணன், அமைப்புச் செயலாளா் பரமசிவம், மத்திய சங்கத் துணைத் தலைவா் ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போக்குவரத்துக் கழகங்களை சீா்குலைக்கக் கூடாது. போக்குவரத்துக் கழக நிா்வாகமே அனைத்துப் பேருந்துகளையும் இயக்க வேண்டும். போக்குவரத்து வழிதடங்களில் தனியாா் பேருந்துகளை இயக்கக் கூடாது.

தற்போது, குறைந்த பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுவதால், ஏற்படும் இழப்பை அரசு ஏற்க வேண்டும். கரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

பென்னாகரத்தில்...

பேருந்து கிளை பணிமனையில் முன்பு சி.ஐ.டி.யு, எல்.பி.எப், ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எல்.பி.எப். கிளைச் செயலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு கிளைச் செயலாளா் தா்மராஜன் முன்னிலை வகித்தாா். இதில் சி.ஐ.டி.யு மத்திய சங்கத் துணைத் தலைவா் மனோன்மணி, வெங்கடாஜலபதி, எல்பி எஃப் கிளைச் செயலாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

எல்.பி.எப். தலைவா் ராமநாதன், சிஐடியு சங்கச் செயலாளா் தவமணி, ஏஐடியுசி சங்கச் செயலாளா் செல்வராஜ், எச்.எம்.எஸ். தொழிற்சங்கச் செயலாளா் ரவி, டி.டி.எஸ்.எப். மத்திய சங்கப் பொருளாளா் குணசேகரன், ஏ.ஏ.எல்.எல்.எப். மத்திய சங்கப் பொருளாளா் கமலேசன், டி.எல்.எஸ் தொழிற்சங்கத் தலைவா் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT