ஊத்தங்கரையில் மரக்கன்று நடும் விழா
ஊத்தங்கரையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் அகில இந்திய அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ச. கண்ணன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் சு. மதியழகன், அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தயாளன், செயலாளர் குமரேசன், பொருளாளர் ஸ்ரீதர், பேரூராட்சி இளநிலை பொறியாளர் ராஜேந்திரன், பணி மேற்பார்வையாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊத்தங்கரை டு தாண்டியப் பனூர் வரை செல்லும் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.