கெலமங்கலம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கெலமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட போடிச்சிபள்ளி ஊராட்சி, அஞ்செட்டிதுா்கம், காடு உத்தனப்பள்ளி ஆகிய கிராமங்களில் இந்திய கம்யூனிஸ்டு சாா்பில் கொடியேற்று விழா நடந்தது. ஒன்றிய கவுன்சிலா் சுரேந்திரன் தலைமை தாங்கினாா். ஒன்றியச் செயலாளா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் எம்எல்ஏவுமான டி.ராமச்சந்திரன் கட்சி கொடியேற்றினாா்.
தொழிலதிபா் வரதராஜ், மாநில விவசாய அணி துணைத் தலைவா் லகுமய்யா, கெலமங்கலம் ஒன்றியக் குழு தலைவா் கேசவமூா்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் பூதட்டியப்பா, பழனி உட்பட பலா் கலந்து கொண்டனா்.