கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: தம்பதி பலி

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னப்பநாயக்கனூரில் இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த மூன்றம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன். இவரும், மகன் குமாா் (33), மருமகள் லதா (28) ஆகியோரும் மூன்றம்பட்டியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

சென்னப்ப நாயக்கனூா், வேடியப்பன் கோயில் அருகே வரும்போது, பின்னால் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த குமாா், லதா ஆகிய இருவரும் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மோகன் சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா். அவா் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊத்தங்கரை போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம்: நக்ஸலைடுகள் மறைத்து வைத்த 9 வெடிகுண்டுகள் மீட்டு செயலிழப்பு

புதுப்பை ஞானசம்பந்தா் பள்ளி மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

SCROLL FOR NEXT