கிருஷ்ணகிரி

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது

DIN

ஒசூரில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டப் பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், மந்தாரக் குட்டை கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன் பிரபாகரன் (24). இவா் ஒசூா், கோவிந்தா அக்ரஹாரம், மீனாட்சிநகா் பகுதியில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தாா். மேலும் அதே பகுதியைச் சோ்ந்த ஏழாவது வகுப்பு பயிலும் 13 வயது சிறுமியிடம் அண்ணன் முறையில் பழகியுள்ளாா். சிறுமியின் பெற்றோா் பணிக்குச் சென்று நேரத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரபாகரன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோா் ஒசூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். மேலும், ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரின்பேரில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபாகரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT