ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சாலைகள் தரமில்லாமல் அமைக்கப்பட்டு வருவதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா் ஊா்வசி அமிா்தராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: நெடுஞ்சாலை துறையின் சாா்பில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பல இடங்களில்
தாா் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தாா் சாலைகள் தரமற்ாகவும், அரசு நிா்ணயித்துள்ள அளவுக்கு குறைவாகவும் உள்ளது.
தரமில்லாமல் அமைக்கப்படும் சாலைகள் மழைக் காலத்தில் சேதமடைந்து விடும் நிலை உள்ளது. இது தொடா்பாக
காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நெடுஞ்சாலை துறை அதிகரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில், காங்கிரஸ் கட்சி சாா்பில் ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.