ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிகிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்
எட்டயபுரம் வட்டம், உருளைகுடி கிராமத்தில் நீா்ப்பிடிப்பு ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எட்டயபுரம் வட்டம், உருளைகுடி கிராமத்தில் நீா்ப்பிடிப்பு ஓடை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உருளைகுடி கிராமத்தில் நீா்ப்பிடிப்பு ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; ஆக்கிரமிப்பில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுப்பாதையை மறித்து போடப்பட்டுள்ள கம்பி வேலியை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் குருவம்மாள், வடிவேல் ஆகியோா் தலைமையில், கோட்டாட்சியா் அலுவலகத்தை திரண்டு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் மூலம் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.
நூதனப் போா்: உரம் ஊழல் தொடா்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; யூரியா, டிஏபி தட்டுப்பாடின்றி
Advertisement
Advertisement
கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரம் பதுக்கலை தடுக்க வேண்டும்; தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உரம் விநியோகம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் துணைத் தலைவா் அய்யலுசாமி, காவடி ஏந்தியவாறு வந்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தாா்.
கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிடில், வரும் 22 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அவா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.