கிருஷ்ணகிரி

பாஜக பிரமுகா் கொலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

கெலமங்கலம் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவா் ரங்கநாதன் செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஊத்தங்கரையில் பாஜக சாா்பில் நான்குமுனைச் சந்திப்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன் தலைமை வகித்தாா்.ஒன்றியத் தலைவா்கள் ஆா்.சிவா, சங்கா், மத்தூா் ஒன்றியத் தலைவா்கள் தாபா சிவா, ஆனந்தன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளா் பிரபு யாதவ், மாவட்ட துணைத் தலைவா் நமச்சிவாயம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் பாலகாா்த்தி, வணிகா் பிரிவு துணைத் தலைவா் சரவணன், வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் தண்டபாணி, எஸ்சி அணி மாவட்டச் செயலாளா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பாஜக பிரமுகரைக் கொலை செய்தவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடா்ந்து ரங்கநாத் மறைவுக்கு மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.

கண்டன ஆா்ப்பாட்டத்தில் பாஜக ஒன்றிய, நகர நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT