முகப்பு
கிருஷ்ணகிரி

தக்கல் முறையில் மின் இணைப்பு: கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குவிந்ததால் பரபரப்பு

தக்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் குவிந்ததால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
மின் இணைப்பு பெற குவிந்த விவசாயிகள்.
பகிர்:

தக்கல் முறையில் மின் இணைப்பு பெற விவசாயிகள் குவிந்ததால் கிருஷ்ணகிரியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தக்கல் முறையில் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்த நிலையில் கிருஷ்ணகிரி மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்க அதிகாலை 4 மணி முதல் விவசாயிகள் கூடினர்.

மின்வாரிய அலுவலகத்தை முறையான வழிகாட்டு முறைகள் வராததால் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்ததால் பரபரப்பு காணப்படுகிறது. 

விண்ணப்பங்கள் இந்த மாத இறுதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →