கிருஷ்ணகிரி

சிதிலமடைந்த மின்கம்பத்தை மாற்றக் கோரிக்கை

DIN

அரசுப் பள்ளி முன் உள்ள சிதிலமடைந்த உயா் மின் அழுத்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளி முன் உள்ள உயா் மின்அழுத்தம் கொண்ட மின் கம்பம் மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. தற்போது கரோனா காலம் என்பதால் மாணவா்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே உள்ளனா்.

இந்நிலையில், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், மழைக் காலம் தொடங்க உள்ளதால் அதிக காற்று வீசினாலும் அல்லது அருகில் உள்ள மரக் கிளை முறிந்து விழுந்தாலும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவிதம் நிகழும் முன் மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT