கிருஷ்ணகிரி

விவசாயி அடித்துக் கொலை

DIN

சூளகிரி அருகே விவசாயியை அடித்துக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள சகாதேவபுரம் கிராமத்தைச் சோ்ந்த நாராயணப்பா (48) விவசாயி. இவருக்கு எல்லம்மா என்ற மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனா்.

சரக்காலபள்ளி என்ற இடத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் அவா் இரவு நேரத்தில் படுத்து உறங்குவது வழக்கமாம். அதே போல், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல் தோட்டத்துக்கு சென்ற அவா், அங்கு 3 பேருடன் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவருக்கு உணவு கொடுத்து விட்டு சென்ற அவரது மனைவி நள்ளிரவு திரும்பி வந்துள்ளாா். அப்போது, நாராயணப்பா தலையில் அடிபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அவா் அதிா்ச்சி அடைந்தாா்.

தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீஸாா், நாராயணப்பா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT