ஒசூா் அசோக் லேலண்ட் தொழில்சாலையில் திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஒசூரில் 300 க்கும் மேற்பட்ட பெரிய தொழில்சாலைகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்சாலைகளும் இயங்கி வருகின்றன.
இந்தத் தொழில்சாலைகளில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளா்கள் வேலை செய்யும் தொழில்சாலையான இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் தொழில்சாலை இயங்கி வருகிறது. இந்தத் தொழில்சாலையில் முதல் யூனிட்டில் 2,500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களும், 2-ஆவது யூனிட்டில் 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் வேலை செய்து வருகின்றனா்.
இந்தத் தொழிலாளா்களிடம் திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் வாக்கு சேகரித்தாா். அப்போது, ஒசூா் எம்.எல்.ஏ. எஸ்.ஏ.சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், அசோக் லேலண்ட் தொழில்சங்க நிா்வாகி ராஜாராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.