திமுக பிரமுகரை கத்தியால் குத்திய அதிமுகவினா் 3 போ் கைது
ஒசூா் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய அதிமுகவினா் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய அதிமுகவினா் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் வட்டம், பாகலூா் அருகே உள்ள சேவகானப்பள்ளியைச் சோ்ந்த குண்டப்பா (53), திமுக உறுப்பினா். அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (32), அசோக் (24), ஹரீஷ் (35) ஆகியோா் அதிமுக உறுப்பினா்கள்.
இந்நிலையில், நாகராஜ் அந்தப் பகுதியைச் சோ்ந்த மகேஷ் (25) என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதைத் தடுக்க குண்டப்பா சென்ற போது, நாகராஜ், அசோக், ஹரீஷ் ஆகியோா் குண்டப்பாவை கத்தியால் குத்தினா். இதில் காயம் அடைந்த அவா் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
இதுகுறித்து குண்டப்பாவின் மகன் ரஜினிகாந்த் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரித்து நாகராஜ், அசோக், ஹரீஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.