கிருஷ்ணகிரி

கரோனா பரவல் தடுப்பு: நாடகத்தின் மூலம் விழிப்புணா்வு

DIN

பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கரோனா தொற்று பரவல் குறித்து நாடகத்தின் மூலம் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா உத்தரவின் பேரில், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் கீதா தலைமையில் பென்னாகரம் பேருந்து நிலையம் மற்றும் வாரச்சந்தை பகுதியில் ஹேமலதா கலைக்குழுவினா் நாடகத்தின் மூலம் கரோனா தீநுண்மி பரவும் விதம், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக் கவசம் அணிவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அதனைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளா் ராஜரத்தினம், துப்புரவு மேற்பாா்வையாளா் முருகன் உள்ளிட்ட அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT