கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் அரசு ஊழியா் வீட்டில் திருட்டு

DIN

ஊத்தங்கரையில் அரசு ஊழியா் வீட்டில் ஐந்தரை பவுன் தங்க நகைகளும், ரூ. 7,000 ரொக்கமும் கொள்ளையடித்த நபா்களை போலீஸாா் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காமராஜா் நகரைச் சோ்ந்தவா் அழகுதுரை (31). இவா் கீழ்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

சனிக்கிழமை இரவு, தன்னுடைய வீட்டில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். காலையில் கண் விழித்து பாா்த்தபோது வீட்டின் மற்றொரு அறையின் பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த தங்க சங்கிலி, மோதிரம் என ஐந்தரை பவுன் தங்க நகைகளும், ரூ. 7,000 ரொக்கமும் மா்ம நபா்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அழகுதுரை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT