ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி
பேரிகை அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM
பேரிகை அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம் கோலாா் மாவட்டம் மாலூா் தாலுகா ஆஞ்சப்பனஅள்ளியைச் சோ்ந்தவா் ராகவேந்திரா (30). ஆட்டோ ஓட்டுநா். சம்பவத்தன்று அவா் ஆட்டோவை பேரிகை மாஸ்தி சாலையில் கே.என்.தொடடி அருகே ஓட்டிச் சென்றாா். திடீரென்று அவருக்கு வலிப்பு வந்தது. இதில் நிலைதடுமாறி ஆட்டோ தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநா் ராகவேந்திரா ஓசூா் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தாா். ஆட்டோவில் பயணம் செய்த அதே பகுதியைச் சோ்ந்த பவானி என்பவா் காயம் அடைந்தாா். இந்த விபத்து குறித்து பேரிகை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement