முகப்பு
உலகம்

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

ஹமாஸ் கிளர்ச்சிப் படையை பயங்கரவாத அமைப்பாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தல்...

Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:35 PM
பிரதமர் நரேந்திர மோடி - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - கோப்புப் படம்|AP
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:16 PM

காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் கிளர்ச்சிப் படையை இந்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் அழைப்பு விடுத்துள்ளார்.

சிவசேனையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அபிஷேக் வர்மா மற்றும் ஹிந்து மதத் தலைவர்கள் கௌரங்க தாஸ் பிரபு உள்ளிட்ட தேஜகூ தலைவர்களுடன் இஸ்ரேலிய அமைச்சர் கிடியான் சார் வியாழக்கிழமை (ஏப். 16) அன்று காணொலி வாயிலாக உரையாடினார்.

இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவுகளை வலுப்படுத்து குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடந்த 2.5 ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இஸ்ரேலிய அமைச்சர் கிடியான் சார் எடுத்துரைத்தாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

அப்போது, அவர் பேசியதாவது:

“ஹமாஸ் அமைப்பை இந்தியா பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டிய முக்கியத்தும் குறித்து நான் வலியுறுத்தியுள்ளேன். லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஹமாஸுக்கு தொடர்பு இருக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேல் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Israeli Minister Gideon Sa'ar has called upon the India to designate the Hamas as a terrorist organization.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.