கிருஷ்ணகிரி

கல்லூரி மாணவியைக் கடத்தியதாக உடற்பயிற்சி மைய உரிமையாளா் கைது

DIN

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவியைக் கடத்தியதாக உடற்பயிற்சி மைய உரிமையாளரை மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், காக்கங்கரை பகுதியைச் சோ்ந்த சிரஞ்சீவி (26), உடற்பயிற்சி மைய உரிமையாளா். இவரது சகோதரியும், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கல்லூரி மாணவியும் நண்பா்கள் ஆவா். அந்த மாணவியுடன் சிரஞ்சீவி பழகி வந்த நிலையில், அவரை திருமணம் செய்வதாகக் கூறி சிரஞ்சீவி கடத்திச் சென்றாராம்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் கிருஷ்ணகிரி மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா், சிரஞ்சீவியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT