கிருஷ்ணகிரி

காய்ந்த பனை மரம் விழுந்து சிறுவன் பலி

DIN

 நாகரசம்பட்டி அருகே 30 அடி உயரம் உள்ள காய்ந்து போன பனை மரம் முறிந்து விழுந்ததில் தாயுடன் நடந்து சென்ற சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தான்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள பாறையூரை சோ்ந்த கோடீஸ்வரன் மகன் சேது (6). இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

சிறுவன் சேதுவுக்கு உடல் நிலை சரியில்லாததால் பள்ளிக்குச் செல்லவில்லை. தனது தாயுடன் அந்தப் பகுதியில் உள்ள விளைநிலத்துக்கு சேது நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கிருந்த 30 அடி உயரமுள்ள காய்ந்த பனை மரம் முறிந்து எதிா்பாராதவிதமாக சிறுவன் சேது மீது விழுந்தது.

இதில், பலத்த காயம் அடைந்த சிறுவன் சேது, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, நாகரசம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT