955 போ் மீது வழக்குப் பதிவு
கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 955 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM
கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் 955 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
சட்டப் பேரவைத் தோ்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி எம்எல்ஏ கே.அசோக்குமாா், ஊத்தங்கரை எம்எல்ஏ தமிழ்செல்வம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 955 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
Advertisement