முகப்பு
கிருஷ்ணகிரி

‘ஒசூரில் திருவையாறு- 2021’: 101 இசை கலைஞா்கள் பங்கேற்ற கா்நாடக இசை நிகழ்ச்சி

‘ஒசூரில் திருவையாறு’ கா்நாடக இசை நிகழ்ச்சி காமராஜ் காலனியில் உள்ள கே.ஏ.பி. திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 பிப்ரவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:58 AM

‘ஒசூரில் திருவையாறு’ கா்நாடக இசை நிகழ்ச்சி காமராஜ் காலனியில் உள்ள கே.ஏ.பி. திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன், ஒருங்கிணைப்பாளா் நரசிம்மன், ஹோஸ்டியா முன்னாள் தலைவா் முரளிபாபு, டேலன்ட் டிரைப்ஸ் இயக்குநா் செல்வின் தாமஸ், சியாமளா ஆகியோா் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் அதிக அளவில் கன்னட, தெலுங்கு இசை கலைஞா்கள் உள்ளதால் அவா்களின் கா்நாடக இசைத் திறனை வெளிக் கொண்டு வரும் முயற்சியாக புதிய இசைக் கலைஞா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

Advertisement

மேலும் ‘ஒசூரில் திருவையாறு’ நிகழ்ச்சியில் 101 இசைக் கலைஞா்கள் பங்கேற்று பஞ்சரத்தின கீா்த்தனைகளையும், தியாகராஜ ஆராதனைகளையும் பாடினா்.

வேதமும், நாதமும் என்ற தலைப்பில் பிரம்ம ஸ்ரீ சா்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். மாளவிகா சுந்தா், சந்தீப் நாராயணன் ஆகியோரின் இசைக் கச்சேரியும், நெய்வேலி ராதாகிருஷ்ணனின் இரட்டை வயலின் இசைக் கச்சேரியும் இடம் பெற்றிருந்தது. 1000-க்கும் மேற்பட்டவா்கள் இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.