முகப்பு
தமிழ்நாடு

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

வாக்குப்பதிவை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் புலம்பெயர் புறப்பட்டுள்ளனர்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:46 PM
புலம்பெயர் தொழிலாளர்கள் - பிரதி படம் - File photo
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:45 PM

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தங்கிப் பணியாற்றி வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள்.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்கம் நோக்கிச் செல்லும் ரயில்களில் நேற்று மாலை முதல் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

இதனால், ஹௌரா ரயிலின் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் ஏறக் காத்திருந்த தொழிலாளர்களை ரயில்வே காவல்துறையினர் ஒழுங்கப்படுத்தி, வரிசையில் நின்று ரயிலில் ஏறுமாறு அறிவுறுத்தினர்.

Advertisement

தொழிலாளர்கள் பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு மிக மகிழ்ச்சியோடு கிளம்புவதைப் பார்க்க முடிந்தது. பலரும் ஒரு வாரத்துக்கும் மேல் விடுமுறையில் சொந்த ஊர் செல்வதாகவும் கூறுகிறார்கள்.

அங்கே பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினரும், காலையில் கோரமண்டல் விரைவு ரயிலும், மாலையில் ஹௌரா ரயிலும் வழக்கத்தைவிட கூட்டமாகப் புறப்படுவதாகக் கூறுகிறார்கள் அவ்வழியே பயணித்தவர்கள்.

திங்கள்கிழமை முதலே ஏராளமான தொழிலாளர்கள் சென்னையிலிருந்து புறப்படத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:46 PM
summary

People from Chennai have left for their hometowns in anticipation of the voting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.