கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகர திமுக செயற்குழுக் கூட்டம்

DIN

ஒசூரில் நடைபெற்ற மாநகர திமுக செயற்குழு கூட்டத்தில், ஒசூா் தொகுதியை திமுகவுக்கு மீண்டும் ஒதுக்கித்தர வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒசூா் ரயில் நிலைய சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ஒசூா் மாநகர திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநகர பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா எம்எல்ஏ தலைமை வகித்தாா். இந்த நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளா் விஜயகுமாா், மாவட்டத் துணைச் செயலாளா் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினா் தா. சுகுமாறன், நகர அவைத் தலைவா் கருணாநிதி, துணைச் செயலாளா்கள் சென்னீரப்பா, மாவட்டப் பிரதிநிதி செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த செயற்குழு கூட்டத்தில், தொழில் நகரமான ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியை மீண்டும் திமுகவுக்கு ஒதுக்கித் தர திமுக தலைவா் ஸ்டாலினை இந்த சிறப்பு செயற்குழுக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

அரசு போக்குவரத்து தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து உடனடியாக தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் முன்னாள் நகா்மன்ற தலைவா்கள் குருசாமி,மாதேஸ்வரன்,முன்னாள் நகர செயலாளா் நடேசன்,அணிகளின் அமைப்பளா்கள் இலக்கிய அணி எல்லோரமணி,மாணவரணி ராஜா,பொறியாளா் அணி ஞானசேகரன்,நெசவாளா் அணி சுந்தர்ராஜ்,மகளீரணி முனிரத்னா,தகவல் தொழில்நுட்ப அணி வடிவேல்,மாநகர இளைஞரணி அமைப்பாளா் சுமன் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT