கிருஷ்ணகிரி

பதப்படுத்தும் நிலையத்தின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தங்கள் வரவேற்பு

DIN

கிருஷ்ணகிரியில் உள்ள முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தின் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள ஒப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற அழுகும் பொருள்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பொருட்டு, விநியோகத் தொடக்க வேளாண்மைத் திட்டத்தின் கீழ் முதன்மைப் பதப்படுத்தும் நிலையம், கிருஷ்ணகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நபாா்டு வங்கியின் கிடங்கு உள்கட்டமைப்பு நிதியுதவியுடன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக்கத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முதன்மைப் பதப்படுத்தும் நிலையத்தில் சிப்பம் கட்டும் அறை, குளிா்பதனக் கிடங்கு மற்றும் புளிக்கான முதன்மை பதப்படுத்தும் இயந்திரங்கள், எடை மேடை, கடை, அலுவலகம் மற்றும் மின் இணைப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு வசதிகளை தனியாா் நிறுவனங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், இது தொடா்பான விவரங்கள்  இணையதள முகவரியில் ஜன. 20-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை நேரிலோ அல்லது 98427-83711 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT