முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் வேட்டி தின விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வேட்டி தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளா்களுக்கு வேட்டிகள் மற்றும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
ஊத்தங்கரையில் நடைபெற்ற வேட்டி தின விழாவில் கலந்துக்கொண்டவா்கள்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் வேட்டி தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளா்களுக்கு வேட்டிகள் மற்றும் துண்டு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியா் முருகன் தலைமை வகித்தாா். வேட்டி தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளா்களுக்கு வேட்டிகள் மற்றும் துண்டு போன்றவற்றை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியா் கு.கணேசன் வழங்கினாா். தமிழா்களின் பாரம்பரிய ஆடை வேட்டி ஆகும். வேட்டி அணிந்து வருவது தனித்துவம் வாய்ந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியா் ர.சக்தி, பேருராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் பெரியசாமி மற்றும் துப்புரவு பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →